தினமணி கதிர்

மைக்ரோ கதை

எம்.ஏ.இறுதித் தேர்வு எழுதி முடித்த ஓர் இளைஞன் ஜோசியரிடம், "நான் மகிழ்ச்சியாக இருப்பேனா என்று  பார்த்துச் சொல்லுங்கள்'' என்றான். 

DIN

எம்.ஏ.இறுதித் தேர்வு எழுதி முடித்த ஓர் இளைஞன் ஜோசியரிடம், "நான் மகிழ்ச்சியாக இருப்பேனா என்று  பார்த்துச் சொல்லுங்கள்'' என்றான். 
"கல்யாணம் ஆனால் மகிழ்ச்சியோடு இருப்பாய்'' என்றார்.
"சரி... கல்யாணம் ஆகுமா என்று பார்த்துச் சொல்லுங்கள்''
"ஒரு வேலை கிடைத்தால்
நிச்சயம் கல்யாணம் ஆகும்'' என்றார்.
"அப்படியானால் வேலை கிடைக்குமா என்று பாருங்களேன்'' என்று கேட்டான்.
"தேர்வில்  பாஸானால் வேலை கிடைப்பது உறுதி'' என்றார் ஜோசியர்.
"தேர்வில் பாஸ் ஆகுவேனா? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள்''
"நன்றாகத் தேர்வு எழுதியிருந்தால் நிச்சயம் நீ பாஸ்''
"நன்றாகத் தேர்வு எழுதியிருக்கிறேனா என்று
பார்த்துச் சொல்லுங்கள்''  என்று கேட்டான் இளைஞன்.
"அது எனக்கு எப்படித் தெரியும். உனக்குத் தானே தெரியும்''  என்றார் ஜோசியர். 
ஆதினமிளகி, வீரசிகாமணி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT