முகப்பு
தினமணி கதிர்

உலக அளவில் சாதிக்கும் தமிழர்...

தமிழ்நாட்டின் மாயவரம் அருகேயுள்ள நல்லாடை என்ற ஊரில் பிறந்து, இன்று நாற்பத்து ஐந்து பன்னாட்டு நிறுவனங்களின் உரிமையாளராக இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

Updated On : 15 டிசம்பர் 2024, 12:00 am IST
மருத்துவர் ராமதாஸ்
பகிர்:

-முத்துரத்தினம்

தமிழ்நாட்டின் மாயவரம் அருகேயுள்ள நல்லாடை என்ற ஊரில் பிறந்து, இன்று நாற்பத்து ஐந்து பன்னாட்டு நிறுவனங்களின் உரிமையாளராக இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். சுமார் இரண்டாயிரம் பேர் இவரது நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்களில் அமெரிக்கர்களும், இங்கிலாந்து நாட்டவர்களும் அடங்குவர்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து மருத்துவரான இவர், 1983-இல் சேஷல்ஸ் என்ற தீவுக்கு மருத்துவத் தொழில் புரியச் சென்றார். அப்போது அங்கு அதிபராக இருந்த ஆல்பர்ட் ரெனே என்பவர், ராமதாஸை அந்த நாட்டு ராணுவத்தில் பணிபுரிய அனுப்பினார். ராமதாஸின் அயராத உழைப்பைப் பார்த்த அதிபர், ராணுவத் தலைமை மருத்துவராகப் பதவி உயர்த்தினார்.

Advertisement

Advertisement

அதிலும் தனது திறமையை ராமதாஸ் வெளிப்படுத்த, அதிபர் ஆட்சி செய்யும் கட்சியான 'பீப்புள் பார்ட்டி' யின் பொருளாளராக்கப்பட்டார். எழுத்து ஆர்வத்தின் காரணமாக ஆங்கிலப் பத்திரிகையை ஒன்றையும் நடத்தினார். இவரது மனைவி ஜுலியா. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் செல்லாத நாடுகளோ, சந்திக்காத தலைவர்களோ இல்லை. இவருக்குப் பிடித்த தலைவர்கள் காமராஜர், சிங்கப்பூரின் 'லீ குயன் யென்' .

'உலக அளவில் சாதிக்கும் புலம்பெயர்ந்த தலைவர்கள்'என்ற நூலில், டாக்டர் ராமதாஸூக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.

'நான் ஏழையாகப் பிறந்தது என் தவறு கிடையாது. ஆனால் நான் இறக்கும்போதும் ஏழையாகவே செத்தால் அது என் தப்பு' என்ற வாசகம்தான் டாக்டர் ராமதாஸின் தாரக மந்திரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments