முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி...

Updated On : 26 மே, 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 மே, 2024 at 7:02 PM

'மன்னா.. புலவர்களுக்கு பாக்கி வைக்காதீர்கள்...?'

'ஏன் அமைச்சரே...?'

'புகழ்ந்து பாட வந்தவர்கள் இகழ்ந்து பாட ஆரம்பித்துவிட்டார்கள்...'

Advertisement

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.



'தளபதியாரே...இந்தப் போரில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என மன்னர் எதை வைத்து உறுதியாகக் கூறுகிறார்...'

'அமைச்சரே... போர்க் களத்தின் குபேர மூலையில் இருந்து படைகள் கிளம்பியிருப்பதை வைத்துதான்...'



'போர் முடிந்தவுடன் என்ன நடக்கும் தளபதியாரே...'

'எதிரி நாட்டில் சக்ஸஸ் மீட் நடக்கும் மன்னா...'



'அரண்மனையில் களை எடுக்க வேண்டும் என்று சொன்னது குறித்து மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்... மந்திரியாரே...'

'அப்படீன்னா.. அடுத்த மன்னர் யாருன்னு கேக்கறாங்க மன்னா...'

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'எங்கள் மன்னர் அடிபட்டு முன்னுக்கு வந்தவர்...'

'எங்கள் மன்னரே அடி மேல் அடி வைத்து

முன்னுக்கு வந்தவர்...'

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'போர் தொடங்கும் முன்னரே மன்னர் கையில்

ரத்தம் வழிகிறதே...'

'உறையில் வாள் தலைகீழாக இருந்திருக்கிறது...'



'கப்பம் கட்டாவவிட்டால் எதிரி என்ன செய்வான்...'

'கட்டம் கட்டிவிடுவான் மன்னா...'



'போர் முடிந்தவுடன் மன்னர் ஏன் வேகமாய் சமையலறைக்குள் ஓடுகிறார்...'

'வெற்றிக்கனியை குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டுமாம்...'



'ஆகாயத்தில் பறவை விமானத்தில் பறப்பது போன்ற கனவு கண்டேன். உடம்பில் இவ்ளோ காயமா...?'

'மன்னா.. அப்போ நீங்க தேர் ஓட்டிக் கொண்டிருந்தீர்கள்...'

-அஹமத், சேலம்.



'மன்னருக்கு பெண்ணாசை வந்ததால் ராணிக்கு மண்ணாசை வந்துவிட்டது...'

'என்ன சொல்கிறீர்கள்...'

'ராணி மசக்கையில் மண்ணைத் தின்கிறார்....'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.



'எதிரிநாட்டு உளவாளி எப்படி நடமாடினான் சொல்ல முடியுமா?'

'கையில் கத்தியோடுதான் மன்னா...'

-அ.செந்தில்குமார், சூலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.