முகப்பு
தினமணி கதிர்

ரேபோ யானை!

கோயில் உற்சவங்களில் பங்கேற்க "ரோபோ யானைகள்' உருவாகியுள்ளன.

Updated On : 8 செப்டம்பர், 2024 at 12:00 AM
ரோபோ யானை
பகிர்:

கோயில் உற்சவங்களில் பங்கேற்க "ரோபோ யானைகள்' உருவாகியுள்ளன.

இந்த யானைகள் மோட்டார் மின்சாரத்தால் இயங்குகின்றன. பலகையில் பொருத்தப்பட்டிருக்கும் ரோபோ யானை பலகையுடன் முன்னும் பின்னும் நகரும். ஒன்றை உருவாக்க, சுமார் 6 லட்சம் ரூபாய் செலவாகிறது. எடை சுமார் 800 கிலோ.

அசல் யானையின் உயரம், பருமன் நிறம், வடிவத்தை இவை கொண்டிருக்கும். அசல் யானை போல் தும்பிக்கையை ஆட்டும். பழம் கொடுத்தால் வாங்கும். பக்தர்களை ஆசீர்வதிக்கும். முறம் போன்ற காதுகளை வீசும். கண்களை மூடித் திறக்கும். தலையை ஆட்டும். இதேபோல், ரோபோ யானை மீது நான்கு பேர் அமரலாம். அதில், ஒருவர் கடவுள் சிலையைப் பிடித்துக் கொண்டு அமருவார். "வாய்ஸ் ஃபார் ஏஸியன் எலிஃபண்ட்ஸ்' என்ற அமைப்பானது ரோபோ யானைக்கு "சங்கர ஹரிஹரன்' என பெயரிட்டுள்ளது.

Advertisement

இந்த யானை உருவாக, நடிகைகள் பார்வதி திருவோத்து, பிரியாமணி உதவி செய்துள்ளனர். இதற்கான முயற்சியின் பின்னணியில் "பீட்டா' அமைப்பும் இருக்கிறது.

கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பல கோயில்களில் இந்த யானைகள் இடம்பெற்றுள்ளன.

நடிகை அய்ன்டிரிதா ரே- நடிகர் திக்நாத் ஜகத்குரு ஆகியோர் வீரசிம்மாசனா மகா சமஸ்தான மடத்தின் கோயிலுக்கு ரோபோ யானையை அன்பளிப்பு செய்துள்ளனர்.

ரோபோ யானைகளை உருவாக்கும் நிறுவனங்கள் இரண்டு கேரளத்திலும் ஒன்று மஹாராஷ்டிராவிலும் செயல்படுகின்றன.

கர்நாடகாவிலும் ரோபோ யானைகள் கோவில்களில் அறிமுகமாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.