கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோவைப் பார்த்து வாக்காளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோவைப் பார்த்து வாக்காளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று ஒரு சுவாரசியமான காட்சி அரங்கேறியது.
அங்கு வாக்களிக்க வந்த பொதுமக்களை, மனிதர்களுக்குப் பதிலாக ஒரு ரோபோ இனிப்பு வழங்கி இன்முகத்துடன் வரவேற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Advertisement
இந்த ரோபோவை அதே அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ளார்.
'டினா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, தமிழர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாரம்பரிய உடை அணிவிக்கப்பட்டிருந்தது தனிச்சிறப்பு. ஜாய் ஸ்டிக் (Joy stick) கருவியின் உதவியுடன் இயக்கப்பட்ட இந்த ரோபோ, வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு மிட்டாய்களை வழங்கி உற்சாகப்படுத்தியது.
தேர்தல் நாளில் வாக்காளர்களின் பதற்றத்தைக் குறைக்கவும், புதிய தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர் மேற்கொண்ட இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களிலும், பொதுமக்களிடையேயும் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக, முதல்முறை வாக்களிக்க வந்த இளைஞர்கள் இந்த ரோபோவுடன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த 'டினா' ரோபோவின் வருகை, கோவை வாக்குச் சாவடியை ஒரு திருவிழாக் கோலமாக மாற்றியது என்றே கூறலாம்.