தினமணி கொண்டாட்டம்

பள்ளி பருவத்திலே!

DIN

வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "பள்ளி பருவத்திலே'. நந்தன்ராம்,  வெண்பா, தம்பி ராமையா, ஆர்.கே.சுரேஷ், பொன்வண்ணன், கே.எஸ்.ரவிகுமார், கஞ்சா கருப்பு, ஊர்வசி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பள்ளிப் பருவ நிகழ்வுகளை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. படம் குறித்து இயக்குநரிடம் பேசும் போது...  "வரம்பு மீறிய காதல், காமம், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது.. இன்னும் இன்னப் பிற மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன. இது அது மாதிரி இல்லாமல், வேறொரு மீட்டுருவாக்கத்தில் நான் எழுதிய கதை இது. ஒரத்தநாடு பக்கம் கிராமத்து வாழ்க்கை என் பூர்வீகம். இப்போது சென்னை, மலேசியா என வாழ்க்கை மாறி மாறி பயணிக்கிறது. ஆனாலும், எப்போதைக்குமான மனசு அந்தப் பள்ளி வாழ்க்கையிலேயே சிலாகிக்க விரும்புகிறது. சக தோழர்கள், ஆசிரியர்கள், அந்த மர நிழல், குளம், ஆறு என எதையும் மறக்க மறுக்கிறது மனசு. ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு மாறின வாழ்க்கை கிடைத்தாலும், இன்னொரு முறை அந்த வாழ்க்கையை வாழவே முடியாது.  வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது மாதிரி,  முகத்தால்... குரல்களால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம். யாராவது வந்து யாருடைய இடத்தையேனும் தங்கள் சாயல்களால் இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதுதான் இந்தக் கதைக்கான பாதிப்பு. இதனால் இது வித்தியாசப்படும்' என்றார் வாசுதேவ்பாஸ்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT