1983-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டின் முதல் உலக கோப்பை கிடைத்தது. அப்போது நடந்த சாதனை தருணங்களை களமாக கொண்டு "83' என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரம் ஏற்கிறார். இது மாதிரி கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத் என அப்போது அணியில் ஒவ்வொருத்தருக்கும் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக, ஜீவா நடிக்கிறார். இந்தத் தொடரில் முக்கிய போட்டியாக ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டம் பார்க்கப்படுகிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்தது அப்போதைய பெரும் சாதனையாக இருந்தது.
இந்த போட்டியில் இடம் பெறும் ரன்வீர் சிங்கின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை கபீர் கான் இயக்குகிறார்.