இவையெல்லாம் என்ன? மாம்பழங்கள் தான்.
மாங்காயை காயவைத்து அரைத்து "ஆம்ச்சூர்' என்ற சமையல் பொடியாக சிலர் பயன்படுத்துவர்.
கர்நாடகாவில் "அப்பிமிடி' என ஒரு வகை மாங்காய் உள்ளது. இது ஊறுகாய்க்கு மிகவும் நல்லது.
பெங்களூரில் உள்ள "இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் நாட்டிகல் சர் ரிசர்ச்' என்ற அமைப்பு 2000-ஆம் ஆண்டிலிருந்து மாம்பழம் ப்ராஜெகட் என்ற ஒன்றை துவக்கி மேற்கு மற்றும் தென் இந்தியாவில் மட்டும் 725 வகையான மாங்காய்களை கண்டுபிடித்து வகைப்படுத்தியுள்ளது. இவற்றில் 225 ஊறுகாய்களுக்கு ஏற்ற மாங்காய் இவற்றை மலநாடு பகுதிகளில் ஏராளமாய் காணலாம்.
வடக்கு கர்நாடகாவில் மாங்காயை வைத்து சட்னி,புளிப்பு பச்சிடி என பலவற்றை செய்து சாப்பிடுவர்.