திரைப்படப் பாடல்களின் முதல் வரியை வைத்து படமாக்குவது இப்போது ஏற்பட்டுள்ள இந்த பழக்கம் 1955-இல் பத்மநாப ஐயர், உடுமலை நாராயணகவியின் பாடலான "எல்லாம் இன்ப மயம்' என்ற பாட்டின் முதல் வரியை வைத்து அந்த காலத்தில் முதன் முதலாக படம் எடுத்தனர்.
எம் .கே. ராதா, எம். ஜி. சக்கரபாணி, எம். ஜி. ராமச்சந்திரன், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன், கே. ஏ. தங்கவேலு இவர்கள் அனைவரும் முதன்முதலாக இணைந்து நடித்த முதல் படம் "சதிலீலாவதி'
தன் வரலாற்றை கவிதை எழுதிய முதல் விடுதலை வீரர் உலகிலேயே கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி தான். ஆங்கிலேய ஆட்சியில் அதை வெளியிட யாரும் முன்வரவில்லை. முப்பத்தி ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் நூல் வடிவமாக வெளிவந்தது.