இந்தியக் குழந்தைகள் முன்பைவிட தற்போது அறிவுக் கூர்மையுடன் விளங்குகின்றனர். செஸ் பிரக்யானந்தா இந்தியாவின் இளம்வயது கிரான்ட் மாஸ்டர். உலகின் இரண்டாவது இளம்வயது கிரான்ட் மாஸ்டரும் இவரே. இந்தப் பெருமைகளை இவர் பெறும்போது, அவருக்கு வயது பதிமூன்று.
இந்தச் சாதனையைத் தகர்த்தபோது டி.குகேஷுக்கு வயது 12 ஆண்டுகள் 7 மாதம், 17 நாள்களாக இருந்தது. இதையெல்லாம் முறியடிப்பதுபோல், 12 வயது 4 மாதம் 25 நாள்களில் அபிமன்யூ மிஸ்ரா "கிரான்ட் மாஸ்டர்' ஆனார்.