ஓட்டுநர் வேலை!
தொழிலாளர் நலத்துறையில் ஓட்டுநராகப் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் நவம்பர் மாதம் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தொழிலாளர் நலத்துறையில் ஓட்டுநராகப் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் நவம்பர் மாதம் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை சரக தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்டோரின் வாகனங்களுக்கு, ஓட்டுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகம், குன்னூர் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம், கோத்தகிரி தோட்ட நிறுவனங்களின் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றிலும் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஓட்டுநர் உரிமத்துடன், இரண்டு ஆண்டு அனுபவம் உள்ள, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, www.labour.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தொழிலாளர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.