முகப்பு
இளைஞர்மணி

மத்திய அரசின் ஸ்காலர்ஷிப்

பள்ளி, கல்லூரி, உயர் நிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு வகையிலான கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:48 PM
பகிர்:

பள்ளி, கல்லூரி, உயர் நிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு வகையிலான கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.
இதன் மூலம் சிறுபான்மை இனத்தவர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பார்சிகள், சமணர்கள் மற்றும் எஸ்டி, எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள், மாற்றுத்திறன் மாணவர்கள், கூலித்தொழிலாளிகளின் குழந்தைகள் உள்ளிட்டோர் பயன்பெறலாம்.
Pre-Matric, Post-Matric, Merit-cum-Means based என பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு ஸ்காலர்சிப் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் கீழுள்ள பல்வேறு அமைச்சகங்கள் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்}லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.