இளைஞர்மணி

உப்பு நீர் முதலைகள்!

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ளது பிதர்கனிகா தேசிய பூங்கா. முதலைகள் அதிகம் உள்ள பூங்கா இது. ஒவ்வோராண்டும் இந்தப் பகுதியில் வாழும் முதலைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஜீ.சுடர்

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ளது பிதர்கனிகா தேசிய பூங்கா. முதலைகள் அதிகம் உள்ள பூங்கா இது. ஒவ்வோராண்டும் இந்தப் பகுதியில் வாழும் முதலைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு பிதர்கனிகா தேசிய பூங்கா உள்ள பகுதியில் 103 முதலை வாழிடங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. ஏறக்குறைய 1,757 முதலைகள் இங்கு உள்ளன.

நாட்டில் உள்ள உப்புநீரில் வாழும் முதலைகளின் மொத்த எண்ணிக்கையில் இது 70 சதவீதமாகும்.

முதலைகள் எந்த இடையூறுமில்லாமல் தங்கி இனவிருத்தி செய்து கொள்வதற்காக ஒவ்வோராண்டும் இந்த தேசிய பூங்கா மே 31- ஆம் தேதி முதல் ஜூலை 31- ஆம் தேதி வரை மூடப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா தொற்றின் காரணமாக இந்த தேசிய பூங்கா பகுதிக்கு மக்கள் வருவது நீண்ட நாள்களாகவே தடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ளதைப் போன்ற முதலைகள் மேற்கு வங்காளத்தின் சுந்தரவன காடுகளிலும், அந்தமான் நிகோபார் தீவுகளிலும் காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம்

இந்த நாள் இனிய நாள்!

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT