உலக அளவில் 100 சிறந்த பெண்களில் ஒருவர்!
உலக அளவில் அரசியல், அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு, சமூக சேவை என பல்வேறு துறைகளில் ஈடுபட்டு உள்ள 100 சிறந்த
மகளிர்மணிஉலக அளவில் 100 சிறந்த பெண்களில் ஒருவர்!
உலக அளவில் அரசியல், அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு, சமூக சேவை என பல்வேறு துறைகளில் ஈடுபட்டு உள்ள 100 சிறந்த
உலக அளவில் அரசியல், அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு, சமூக சேவை என பல்வேறு துறைகளில் ஈடுபட்டு உள்ள 100 சிறந்த பெண்களைத் தேர்வுச் செய்து பி.பி.சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2015ஆம் ஆண்டிற்கான சிறந்த 100 பெண்கள் பட்டியலில் ஏழு இந்திய பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.
அதில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஸ்மிருதி நாக்பால். 25 வயது ஆகும் இளம் தொழிலதிபரான இவரின் நிறுவனத்தின் பெயர் "அதுல்யகலா'. கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் ஸ்மிருதியின் சிறப்பு, இவை அனைத்தும் காதுகேளாத கலைஞர்களைக் கொண்டு, வடிவமைத்து தயாரிக்கப்படுபவை.
ஸ்மிருதி கூறுகையில்:
""இந்தியா காதுகேளாத மக்கள் அதிகம் உள்ள நாடு. ஆனால், இங்கு அவர்களுக்கு ஏற்ற வசதிகள் அதிகம் இல்லை. நிறைய பேர் ஏராளமான கற்பனை வளத்தோடும், திறமையோடும் இருக்கின்றனர். ஆனால், காதுகேளாமை பிரச்னையால் இவை அனைத்தும் யாருக்கும் தெரியாமல் போய் விடுகிறது. அவர்களை கண்டறிந்து, வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கைக்கு அந்த திறமை உதவி செய்கிறது. அந்த பணத்தின் மூலம், நிறைய பேருக்கு உதவவும் முடிகிறது.
இந்த அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதே எனது சகோதரிகளால் தான். எனது சகோதரிகள் இருவரும் காதுகேளாதவர்கள். அவர்களுடன் சிறு வயதில் பேதுவது என்பது சைகையில் அல்லது காகிதத்தில் எழுதி காட்டுவதன் மூலம்தான். இதில் ஒரு சிரமம் இருந்தது. எப்போதும் சைகை என்பது பலன் தரவில்லை, எனவே சைகை மொழியை கற்றுக் கொண்டு அவர்களுடன் உரையாடினேன். காதுகேளாதோரை வைத்து உருப்படியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதே எனது சகோதரிகளின் திறமையை வைத்துதான். இந்த முயற்சிக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரம் - குடியரசு தின அணிவகுப்பை காதுகேளாதோருக்கான மொழியில் வர்ணனை செய்ததுதான்'' என்கிறார்.