வாசலை நோக்கி...
""ஒரு முறை முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றுக்குச் சென்றேன். அங்கே இருந்த முதியோருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அழகான பொருட்களும் இருந்தன. ஆனால் ஒவ்வொருவரும் அந்த இல்லத்தின் வாசல் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தனர்.
""ஒரு முறை முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றுக்குச் சென்றேன். அங்கே இருந்த முதியோருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அழகான பொருட்களும் இருந்தன. ஆனால் ஒவ்வொருவரும் அந்த இல்லத்தின் வாசல் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் முகத்தில் சிரிப்பு இல்லை. நம் வயதானவர்களில் ஏன் அவர்கள் இறக்கும் நேரத்தில் கூட புன்சிரிப்பைப் பார்த்த நான், ""வசதிகள் இருந்தும் இந்த இல்லத்தில் உள்ள முதியோர் ஏன் வாசல்பக்கமே வெறித்துப் பார்த்தபடி இருக்கின்றனர்'' என்று அந்த இல்லத்தின் நிர்வாகிகளான சகோதரிகளிடம் கேட்டேன்.
அதற்கு அவர்கள் தங்களின் மகன் அல்லது மகள் யாராவது தங்களைப் பார்க்க வருவார்கள் என்னும் நம்பிக்கைகளில் இப்படி ஒவ்வொரு நாளும் கதவையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் மறக்கப்பட்டுவிட்டோம் என்னும் எண்ணத்தால் இவர்கள் அதிகம் காயப்பட்டுள்ளனர்'' என்று கூறினார்.
நோபல் பரிசு ஏற்புரையில் அன்னை தெரஸா