அன்னை சாரதா தேவி கூறிய கடைசி செய்தி
அன்னை சாரதா தேவியார் உடல் நலிவுற்று படுக்கையிலே இருந்தார். அவரைக் காண வந்த அன்னபூரணம்மாள் என்ற பெண்மணி, "" உலகில் நம்முடையதென்று எது உள்ளது'' என்று கூறியபடி புலம்பிக் கொண்டிருந்தார்.
அன்னை சாரதா தேவியார் உடல் நலிவுற்று படுக்கையிலே இருந்தார். அவரைக் காண வந்த அன்னபூரணம்மாள் என்ற பெண்மணி, "" உலகில் நம்முடையதென்று எது உள்ளது'' என்று கூறியபடி புலம்பிக் கொண்டிருந்தார்.
அவரை அழைத்த அன்னை "" மகளே! உனக்கு மன அமைதி வேண்டுமானால் உலகத்தவர் மீது குறை கூறாதே. உன்னிடத்தில் உள்ள குறைகளை கிளறிப்பார்.
உலகம் முழுமையும் உன்னுடையதாக்கக் கற்றுக்கொள். வேற்றுமை எதுவும் இல்லை. உலகனைத்தும் நமதே. இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்'' என்று கடைசி செய்தியைக் கூறினார் சாரதா தேவி.