டிப்ஸ்... டிப்ஸ்..
* குளிர்காலத்தில் தினமும் காலை மாலை இருவேளையும் சுக்குமல்லி டீ அருந்தினால் குளிர்கால நோய்களைத் தவிர்க்கலாம்.
* வாரம் இருமுறை இஞ்சி துவையலை உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறுகளே வராது.
* கனிந்த பூவன் பழத்தில் சீரகத்தூள் தூவிச் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். மலச்சிக்கல் தீரும்.
* வாரம் இரண்டு பேயன் வாழைப்பழங்களைச் சாப்பிட்டால் உடல் சூடு ஒரே சீராக இருக்கும்; மஞ்சள் காமாலை நோய் வருவதைத் தடுக்கும்
* மாதுளம் பிஞ்சின் மேல் தோலை நீக்கி உள்ளிருக்கும் விதையைச் சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் அகலும், வாந்தி நிற்கும், அதிக தாகம் அடங்கும்.
* "சுரைக்காய்க்கு உப்பு இல்லை' என்ற பழமொழி உண்டு. சுரைக்காயை எந்த வகையில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் அது உப்பின் அளவைக் குறைக்கும்.
* தண்ணீரில் சீரகம் போட்டு ஊற வைத்துக் குடித்தால் அதிக கண் எரிச்சல் தீரும்.