"2010-ஆம் ஆண்டு முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானபோது "தீன்பத்தி' என்ற படத்தில் என்னுடைய தந்தை சக்தி கபூருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வெற்றி தோல்விகளை நான் சிறுவயதிலேயே சந்திக்க உதவியது. மீண்டும் என் தந்தையுடன் சேர்ந்து நடிக்க வேண்டுமென்ற ஆசையும் எனக்கிருக்கிறது'' என்று கூறும் சிராத்தா கபூர், தற்போது இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலாக நடித்து வருகிறார்.