அண்மையில் சிங்கப்பூரில் போர்டிங் பள்ளியில் படித்து வரும் தன் மகள், தன்னை பார்க்க வந்தபோது, பத்திரிகையாளர்கள் கண்களில் படாமல் திரும்பவும் சிங்கப்பூர் சென்று மகளை விட்டுவிட்டு வந்துள்ள நடிகை கஜோல். தன்னுடைய மகன் வெளி உலகுக்கு தெரிந்தவனாக இருந்தாலும், மகளை மட்டும் அடையாளம் காட்டாமல் பாதுகாத்து வரும் கஜோல் இடையில் தமிழில் "விஐபி -2' படத்தில் நடித்த பின், இந்தியில் "தில்வாலே' படத்திற்கு பின் மூன்றாண்டுகள் கழித்து தன் கணவர், அஜய் தேவ்கன் தயாரிக்கும் "ஹெலிகாப்டர் ஈ.வா' என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன் நீண்ட இடைவெளிக்குப்பின் அமிதாப்பச்சன் முக்கிய காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.