உலகத்தின் மிகப் பெரிய சிகரமான எவரெஸ்டில் காலடி எடுத்து வைக்க பெருங்கூட்டமாம். அதுபோல அசம்பாவித மரணங்களும் அதிகமாக ஏற்பட்டுள்ளன. பனி உருகத் தொடங்கியிருப்பதால் முன்பு எவரெஸ்ட் பயணத்தின்போது இறந்தவர்களின் பனி மூடிய சடலங்கள் இப்போது வெளியே தெரிய ஆரம்பித்துள்ளனவாம். இவற்றைக் கண்டு பயப்படாமல் பலரும் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்து வருகின்றனர்.
சென்ற வாரம் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தவர்களில் ஒருவர் ஷீத்தல் ராஜ். இருபத்திரண்டு வயதாகும் ஷீத்தல் உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
உலகில் உயரத்தில் மூன்றாவது சிகரமாக இருக்கும் கஞ்சஞ்சங்கா சிகரத்தில் ஏறி ஷீத்தல் சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையின் அடிப்படையில் 2019 எவரெஸ்ட் சிகரம் ஏறும் குழுவில் ஷீத்தல் இடம் பெற்றார்.
""பள்ளியில் சாரணர் பயிற்சியில் சேர்ந்த போதுதான் எனக்கு மலை ஏறுவதில் ஆர்வம் பிறந்தது. அந்த ஆர்வம்தான் குறைந்த வயதில் என்னை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வைத்தது. அப்பா ஒரு கார் டிரைவர். "இதுவரை எவரெஸ்ட் சிகரத்தை படங்களில் மட்டுமே பார்த்து வந்தோம். இப்போது நீ எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து திரும்பியிருக்கிறாய்' என்று வாழ்த்தினார்'' என்கிறார் ஷீத்தல் ராஜ். மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெருமை ஷீத்தலுக்குச் சொந்தமாகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.