தேவையானவை:
சிகப்பு செம்பருத்தி பூ - 10
முளைக்கட்டிய வெந்தயம் - 1கிண்ணம்
பச்சரிசி - 100 கிராம்
சிவப்பு அவல் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 50 மில்லி
செய்முறை:
பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். சிவப்பு அவலையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஊறிய பச்சரிசி, சிவப்பு அவல், பச்சை மிளகாய், சீரகம் , தேங்காய்த் துருவல், முளைகட்டிய வெந்தயம், செம்பருத்தி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும். உப்பு சேர்த்துக் கலக்கவும். மாவை 6 மணி நேரம் புளிக்கவைக்கவும். தோசை தவாவில் மாவை வெல்லிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும்.