எண்ணெய் வழியும் சருமத்திற்கு சில டிப்ஸ் ..
முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழியும் சருமம் உடையவர்கள், இந்த சின்ன சின்ன ஆலோசனைகளை பயன்படுத்தி பயன்பெறலாம்:
முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழியும் சருமம் உடையவர்கள், இந்த சின்ன சின்ன ஆலோசனைகளை பயன்படுத்தி பயன்பெறலாம்:
*தக்காளிப் பழச் சாற்றை முகத்தில் பூசி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய்த் தன்மை கட்டுப்பட்டுவிடும். தக்காளியுடன் வெள்ளரிப் பழத்தை அல்லது ஒட்ஸை சேர்த்து பூசி வரலாம். முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்கிவிடும்.
*முகத்தில் மோரைப் பூசி சிறிது நேரத்துக்குப் பிறகு கழுவி வந்தால் எண்ணெய்த் தன்மை குறையும்.
*சோள மாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்துக்குப் பின் கழுவினால் முகத்தில் எண்ணெய்த் தன்மை நீங்கும்.
*வெள்ளரிக் காயைத் தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் சுரக்கும் எண்ணெய் கட்டுப்படும்.
*எண்ணெய்த் தன்மையுள்ள சருமத்தினர் கடலை மாவைப் பயன்படுத்தி அடிக்கடி முகம் கழுவ வேண்டும்.
*வெள்ளரிச் சாறு, எலுமிச்சைச் சாறு, சந்தனப் பவுடர், தயிர், பாதாம் பவுடர், உருளைக்கிழங்குச் சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்துக்குப் பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் எண்ணெய்த் தன்மை நன்கு குறையும்.