சேவிகா தளம் உருவாக்கியவர்!
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரான சவிதா பென், 1944- இல் பெண்களுக்கான சேவிகா தளம் உருவாகக் காரணமானவர்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரான சவிதா பென், 1944- இல் பெண்களுக்கான சேவிகா தளம் உருவாகக் காரணமானவர். 1947-இல் பிரிவினைக் கலவரத்தின்போது, இடம் பெயர்ந்த மக்கள் பட்ட அவதி சுதந்திர வரலாறு கண்ட ஒரு சோகப் படலமாகும். அப்போது அவர்களுக்கான நிவாரணப் பணியாகச் சவிதா பென் அம்மையார் சிறுவர்களுக்கும், அகதிப் பெண்களுக்கும், முதியோருக்கும் பல தொழிற்பயிற்சிக் கூடங்களை நிறுவி அருந்தொண்டாற்றினார்.
இந்திய அரசு அப்பெருமாட்டியின் சேவையைப் பாராட்டி "பத்மஸ்ரீ' விருது வழங்கிக் கௌரவித்தது.
கிளமெண்ட் ஈசுவர் எழுதிய "முதன்மைப் பெண்டிர்' என்ற நூலிலிருந்து.