முகப்பு
மகளிர்மணி

தினை உப்புமா 

தினையை நெய் விட்டு இளம் சிவப்பாக வறுத்துக்கொள்ளவும். சூடான எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக்கொள்ளவும்.

Updated On : 15 மார்ச், 2021 at 11:15 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:11 AM

தேவையானவை:

தினை அரிசி - 1 கிண்ணம்
கடுகு - 1 மே.கரண்டி
உளுத்தப்பருப்பு - 2 மே.கரண்டி
கடலைப் பருப்பு - 2 மே.கரண்டி
இஞ்சி. நறுக்கியது - சிறிது
மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
உப்பு தேவையான அளவு
நெய் - 2 மே.கரண்டி
கடலை எண்ணெய் - 3 மே.கரண்டி

செய்முறை:

Advertisement

தினையை நெய் விட்டு இளம் சிவப்பாக வறுத்துக்கொள்ளவும். சூடான எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக்கொள்ளவும்.

இதனுடன் 3  கிண்ணம் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து வரும் போது வறுத்த தினையை சேர்த்து கட்டி தட்டாமல் உப்பு. பெருங்காயத் தூள் சேர்த்து கிளறவும். மூடிவைத்து வேகவிடவும்.மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.