தபால்களை பட்டுவாடா செய்த நட்சத்திரம்!
விடுதலைப் போர் கருவியாக காந்திஜி கண்டு பிடித்து வழங்கிய சத்தியாகிரக முறைகளை, அந்நாளிலேயே சிலர் தம் சுய நன்மைக்குக் கையாள முற்பட்டுவிட்டனர்.
விடுதலைப் போர் கருவியாக காந்திஜி கண்டு பிடித்து வழங்கிய சத்தியாகிரக முறைகளை, அந்நாளிலேயே சிலர் தம் சுய நன்மைக்குக் கையாள முற்பட்டுவிட்டனர்.
சங்கீதத்திலும், நடிப்பிலும் அந்நாளில் தலைசிறந்த அகில இந்திய நட்சத்திரமாக விளங்கிய சாந்தா ஆப்தேக்கும், ஒப்பந்தத்தில் இருந்த பிரபாத் ஸ்டூடியோவினருக்கும் ஏதோ தகராறு மூண்டது. சாந்தா ஆப்தே தம் உரிமைகளை வற்புறுத்துவதற்காக சில தினங்கள் அந்த ஸ்டூடியோ முன்பாக உண்ணாவிரதம் இருந்தார்.
அந்நாளில் சாந்தா ஆப்தே "டமால் டுமீல்' என்று ஏதாவது செய்து கொண்டே இருப்பார்.
உதாரணமாக, 1960-இல் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடந்தது. அப்பொழுது சாந்தா ஆப்தே தாமாகவே முன்வந்து, தபால்களை பட்டுவாடா செய்வதற்கு உதவினார்.