சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை!
இந்தியாவின் பெண்கள் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய திரிஷ் காமினி சென்னையை சேர்ந்தவர்.
இந்தியாவின் பெண்கள் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய திரிஷ் காமினி சென்னையை சேர்ந்தவர். தனது எட்டு வயதிலேயே 16 வயதுக்குப் பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இவர், இதுவரை மூன்று முறை பி.சி.சி.ஐ விருது பெற்ற ஒரே இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஆவார். பெண்கள் உலகக் கோப்பைப் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் திரிஷ் காமினிக்கு உண்டு.