மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!: பெரியதிரையில் கவனம் செலுத்தும் டிடி!

ஸ்ரீ

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு சிலரில் டிடியும் (திவ்யதர்ஷினி) ஒருவர். பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் இவர். சமீபத்தில் வெளியான தனுஷின் "பவர்பாண்டி' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது தன்கவனம் முழுவதையும் பெரியதிரை பக்கம் திருப்பியிருக்கிறார் டிடி. "பவர்பாண்டி'யைத் தொடர்ந்து, தற்போது "துருவ நட்சத்திரம்', "ஜோஸ்வா' போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் "பவர்பாண்டி'யில் நடித்தது குறித்து டிடி கூறுகையில், ""நடிகர் தனுஷ் "பவர்பாண்டி'யில் நடிக்க கேட்டபோது, "கெஸ்ட் ரோலாக இருந்தாலும் பெண்களுக்கு ஒரு மெசேஜ் சொல்லும்படியான கேரக்டர். இந்த கதாபாத்திரத்தில், மக்களுக்கு பரிச்சயமான முகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அதனால்தான் உங்களை தேர்தெந்தெடுத்தோம் நீங்கள் நடிக்கிறீர்களா?' என்றார். அவர், சொன்ன வார்த்தைகளுக்காக, அந்தப் படத்தில் ஒரே காட்சியாக இருந்தாலும் நடித்துக் கொடுத்தேன். அவர் சொன்னது போலவே, அந்த கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT