மகளிர்மணி

பேரீச்சம் பழப் பொங்கல்

பேரீச்சம் பழத்தைப்  பொடியாக  நறுக்க  வேண்டும்.  அரிசி,  பருப்பை ஒன்றாகக் களைந்து  வைக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

பச்சரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு  - 100 கிராம் 
வெல்லம் - 300 கிராம்
தேன் - 25  கிராம்
பேரீச்சம்பழம் - 10
சுக்குத்தூள் - 1 தேக்கரண்டி
நெய்  - 50 கிராம்
ஏலக்காய்த்தூள்  -  1 தேக்கரண்டி
பால்  - 100 மில்லி

செய்முறை:   

பேரீச்சம் பழத்தைப்  பொடியாக  நறுக்க  வேண்டும்.  அரிசி,  பருப்பை ஒன்றாகக் களைந்து  வைக்க வேண்டும்.  ஒரு பாத்திரத்தில்  தேவையான தண்ணீர்விட்டு அடுப்பில்  வைத்து கொதித்ததும்  அரிசி,  பருப்பைச் சேர்த்து  வேக வைக்க வேண்டும்.  பாதி வெந்ததும் பால் சேர்த்து  இன்னும்  குழையவிட  வேண்டும். வெல்லத்தை  கொஞ்சம்  தண்ணீர் சேர்த்து  கரையவிட்டு  கொதித்ததும் வடிகட்டி வெந்த பொங்கலில்  சேர்க்க வேண்டும்.  அத்துடன் தேன்,  பொடியாக  நறுக்கிய பேரீச்சம்பழம் சேர்த்து  நன்றாக  கிளறி  சேர்ந்தாற் போல் வந்ததும்  நெய், ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து கிளறி இறக்க  வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT