மகளிர்மணி

மசாலா பணியாரம்

பச்சரிசி, உளுந்து ஆகிய இரண்டையும் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைத்து உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.

அ . ப . ஜெயபால்

தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 2 கிண்ணம்
உளுத்தம் பருப்பு- ஒன்றரை கிண்ணம்
தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்
கடுகு- அரை தேக்கரண்டி
உளுந்து- 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்- கால் கிண்ணம்
பச்சை மிளகாய்-4
நறுக்கிய கறிவேப்பிலை- 2 கொத்து
கடலை எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

பச்சரிசி, உளுந்து ஆகிய இரண்டையும் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைத்து உப்பு போட்டு கலந்து கொள்ளவும். கடாயில் 2 தேக்கரண்டி ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தனித்து வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி, தேங்காய்த் துருவல் வதக்கி இறக்கவும். ஆறியதும் மாவில் கொட்டி கலந்து கைகளால் மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மல்லி சட்னி, தேங்காய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓசூர் மாநாட்டில் 92 ஒப்பந்தங்கள் மூலம் 49,353 வேலைவாய்ப்பு!

ஓல்ட் இஸ் கோல்ட்... மீனா!

கமல் செயலால் கண் கலங்கிய ஊர்வசி!

மழை மட்டும்தான் அழகா..? நைலா உஷா!

சின்ன திரை பிரபலத்துக்கு குழந்தை பிறந்தது!

SCROLL FOR NEXT