அளவுக்கு மீறி காரம், உப்பு, புளி இவைகளைச் சேர்த்துச் சமைப்பதால் கீரையிலுள்ள சத்துகள் அழிந்து விடும்.
டர்னிப் சமைக்கும்போது அதன் மேல் இருக்கும் ஊட்டச் சத்துகள் நிறைந்த இலைகளையும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும்.
மருந்துண்ணும் காலத்தில் அகத்திக் கீரையைச் சாப்பிடக் கூடாது.
வாய்ப்புண் உடையவர்கள் பச்சையாகவுள்ள மணத்தக்காளிக் கீரையின் சாறை வாய் கொப்பளித்து பிறகு வெளியேற்றிவிடலாம்.
கீரைகளை வேக வைத்த நீரைக் கீழே கொட்டுவதை விட, கீரையும் நீரும் ஒன்றுபடக் கடைவதே சிறந்தது.
பச்சையாக உண்ணும் முட்டைக்கோஸ் இரண்டரை மணி நேரத்தில் செரிமானமாகும். மேலும் அதிக சத்துகள் உடம்பில் சேரும்.
நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் மணத்தக்காளிக் கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.