மகளிர்மணி

தக்காளி காய் கூட்டு

தக்காளி காயை நன்கு கழுவி  நறுக்கி வைக்கவும். துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

சுந்தரி காந்தி

தேவையானவை :

தக்காளி காய்  - கால் கிலோ
துவரம் பருப்பு - 50 கிராம் 
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
வர மிளகாய் - 3 
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 குழிக்கரண்டி

செய்முறை: 

தக்காளி காயை நன்கு கழுவி  நறுக்கி வைக்கவும். துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை , வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கிய  தக்காளிக்காய் போட்டு நன்கு கிளறி, பின் ஊற வைத்த துவரம் பருப்பை கழுவிப் போட்டு நன்கு கிளறவும்.  பின்  அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக வைக்கவும். தக்காளி காய், பருப்பு நன்கு வெந்த பின், அதில் உப்பு மற்றும்  தேங்காய்த் துருவல்  சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், தக்காளிக் காய்  கூட்டு தயார். நல்ல சத்தான புதுமையான இந்த கூட்டு சாம்பார், ரசம், சாத்திற்கு நல்ல ஜோடி. துவரம்பருப்புக்கு பதில் சிறுபருப்பு உபயோகித்தும் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT