மகளிர்மணி

தக்காளி காய் பச்சடி

வாணலியில் இரண்டு டம்ளர் நீர் ஊற்றி தக்காளி காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும்.

சுந்தரி காந்தி

தேவையானவை

தக்காளி காய் - 8
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கடுகு -  கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - சிறிது
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:   

வாணலியில் இரண்டு டம்ளர் நீர் ஊற்றி தக்காளி காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். பின்பு மத்தைக் கொண்டு நன்கு மசித்து தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்  பொடியாக நறுக்கிய  வெங்காயம், உப்பு சேர்த்து, நன்றாக வதக்கவும்.  இதனுடன் மசித்து வைத்துள்ள தக்காளிக்காய் கரைசல் சேர்த்து, மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.  அதனுடன் கொத்துமல்லி இலையைச் சேர்த்துப் பரிமாறவும். ருசியான, சத்தான தக்காளி காய் பச்சடி தயார்.  இது இட்லி , தோசைக்கு சரியான ஜோடி. குறிப்பு: கூடுதல் சுவைக்கு வேக வைத்த சிறுபருப்பு சேர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT