FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

தக்காளி காய் பச்சடி

வாணலியில் இரண்டு டம்ளர் நீர் ஊற்றி தக்காளி காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும்.

Updated On : 29 மார்ச் 2022, 9:26 pm IST
பகிர்:

தேவையானவை

தக்காளி காய் - 8
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கடுகு -  கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - சிறிது
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:   

Advertisement

Advertisement

வாணலியில் இரண்டு டம்ளர் நீர் ஊற்றி தக்காளி காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். பின்பு மத்தைக் கொண்டு நன்கு மசித்து தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்  பொடியாக நறுக்கிய  வெங்காயம், உப்பு சேர்த்து, நன்றாக வதக்கவும்.  இதனுடன் மசித்து வைத்துள்ள தக்காளிக்காய் கரைசல் சேர்த்து, மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.  அதனுடன் கொத்துமல்லி இலையைச் சேர்த்துப் பரிமாறவும். ருசியான, சத்தான தக்காளி காய் பச்சடி தயார்.  இது இட்லி , தோசைக்கு சரியான ஜோடி. குறிப்பு: கூடுதல் சுவைக்கு வேக வைத்த சிறுபருப்பு சேர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments