FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

டிப்ஸ்... டிப்ஸ்...

எந்த வகை சுண்டல் செய்தாலும், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கலந்து கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும்.

Updated On : 11 செப்டம்பர் 2022, 6:00 am IST
பகிர்:

எந்த வகை சுண்டல் செய்தாலும், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கலந்து கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும்.
காலையில் செய்த சாம்பாரை இரவில் உபயோகப்படுத்த சிறிது வெந்தயம், தனியாவை வறுத்துப் பொடித்து அத்துடன் 3 தேக்கரண்டி சீரகத்தைச் சேர்த்து அரைத்துவிட சாம்பார் மணக்கவும்.
எந்த வகை சூப்பாக இருந்தாலும் அதில் அரை தேக்கரண்டி இஞ்சிச் சாறு சேர்த்தால், சூப்பின் சுவையே அலாதிதான்.
 ஊறுகாய் செய்யும்போது, உப்பை லேசாக வறுத்துப் போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.
புளித்த தோசை மாவு கொஞ்சமாக இருந்தால், அதில் மூன்றுபடி ஜவ்வரிசியை ஊறவைத்து பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்துப் பிசைந்து போண்டா சுவையாக இருக்கும்.
வெண்டைக் குழம்பு  வைத்தால் அதில் ஒரு கரண்டி அரிசி மாவை போட்டுவிட்டால், வெண்டைகள் கரையாமலேயே இருக்கும்.
 முருங்கைக் கீரையை மரத்தில் இருந்து உடைத்ததும் உடனடியாக நீரில் நனைத்துவிட்டால், இரு நாள்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments