எந்த வகை சுண்டல் செய்தாலும், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கலந்து கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும்.
காலையில் செய்த சாம்பாரை இரவில் உபயோகப்படுத்த சிறிது வெந்தயம், தனியாவை வறுத்துப் பொடித்து அத்துடன் 3 தேக்கரண்டி சீரகத்தைச் சேர்த்து அரைத்துவிட சாம்பார் மணக்கவும்.
எந்த வகை சூப்பாக இருந்தாலும் அதில் அரை தேக்கரண்டி இஞ்சிச் சாறு சேர்த்தால், சூப்பின் சுவையே அலாதிதான்.
ஊறுகாய் செய்யும்போது, உப்பை லேசாக வறுத்துப் போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.
புளித்த தோசை மாவு கொஞ்சமாக இருந்தால், அதில் மூன்றுபடி ஜவ்வரிசியை ஊறவைத்து பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்துப் பிசைந்து போண்டா சுவையாக இருக்கும்.
வெண்டைக் குழம்பு வைத்தால் அதில் ஒரு கரண்டி அரிசி மாவை போட்டுவிட்டால், வெண்டைகள் கரையாமலேயே இருக்கும்.
முருங்கைக் கீரையை மரத்தில் இருந்து உடைத்ததும் உடனடியாக நீரில் நனைத்துவிட்டால், இரு நாள்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்.