மகளிர்மணி

கோவைக்காய் உசிலி

முதல்நாள் இரவே பட்டாணியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கோவைக்காயை பொடியாக நறுக்க வேண்டும். மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

கோவைக்காய் 300 கிராம்
துவரம் பருப்பு 1 மேசைக் கரண்டி
காய்ந்த பட்டாணி 1 மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் 3
காய்ந்த மிளகாய் 4
கடுகு 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: 

முதல்நாள் இரவே பட்டாணியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கோவைக்காயை பொடியாக நறுக்க வேண்டும். மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வேண்டும். தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், பட்டாணி ஆகிய மூன்றையும் சேர்த்து ஊற வைத்திருக்கும் துவரம் பருப்புடன் சேர்த்து கொரகொரவென்று அரைத்துகொள்ள வேண்டும்.  வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு போட்டு தாளித்து வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்பு, அதில் அரைத்த விழுதைப் போட்டு நன்றாக வதக்கி உதிரியாக வரும்போது, கோவைக்காயை சேர்த்து நன்றாகக் கிளறி கீழே இறக்கி ஆறியதும் எடுத்துப் பரிமாறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT