முகப்பு
மகளிர்மணி

வாழைப்பூ உசிலி

துவரம் பருப்பு, பயத்தம் பருப்பை நீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைத்து நீரைவடிகட்டி காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.

Updated On : 1 டிசம்பர் 2024, 8:31 pm IST
வாழைப்பூ உசிலி
பகிர்:

தேவையானவை:

வாழைப்பூ-1

கெட்டியான மோர்- 3 மேசைக்கரண்டி

Advertisement

Advertisement

மஞ்சள் தூள்- அரை மேசைக்கரண்டி

பெருங்காயம்- 1 மேசைக்கரண்டி

பெரிய வெங்காயம்- 2

துவரம் பருப்பு- 50 கிராம்

பயத்தம் பருப்பு- 1 மேசைக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 6

கடுகு, உளுத்தம் பருப்பு- 1 மேசைக்கரண்டி

செய்முறை:

துவரம் பருப்பு, பயத்தம் பருப்பை நீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைத்து நீரைவடிகட்டி காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர், அதனுடன் பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைத்தால் உதிரியாகிவிடும்.

வாழைப்பூவை நறுக்கி மோரில் போட்டு எடுத்துப் பிறகு உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி வைத்து வெந்த வாழைப்பூ, உதிர்த்த பருப்பு போட்டு வதக்கி கீழே இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments