அழகர்கோவில் தோசை
பச்சரிசி, உளுந்து, இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஊற வைக்கவும்.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 1 கிண்ணம்
கறுப்பு உளுந்து- கால் கிண்ணம்
கறிவேப்பிலை- 2 ஆர்க்குகள்
இஞ்சி, மிளகு,
சீரகம்- தலா 1 மேசைக்கரண்டி
நெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி, உளுந்து, இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து அரைக்கவும். தவாவை சூடாக்கி, சிறிய தோசைகளாக்கி சுற்றிலும், நெய் சேர்த்து இருபுறமும் சுட்டு எடுக்கவும்.