மகளிர்மணி

பிரண்டை புளிக்குழம்பு

முதலில் வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும், பின்னர், சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள பிரண்டைத் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.

DIN

தேவையான பொருள்கள்:

நறுக்கிய பிரண்டைத் துண்டுகள்- 1 கிண்ணம்
தக்காளி-1
சின்ன வெங்காயம்- கால் கிண்ணம்
பெருங்காயம்- சிறிதளவு
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
எண்ணெய்- 30 மில்லிஹமிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள்- 1 தேக்கரண்டி
சீரகத் தூள்- கால் தேக்கரண்டி
மிளகுத் தூள்- சிறிதளவு
புளி- சிறிதளவு
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை:

முதலில் வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும், பின்னர், சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள பிரண்டைத் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். நன்றாக ஊற்றி மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். புளிவாசனை போய் குழம்புப் பதம் வந்தவுடன்  அதில் துருவி வைத்துள்ள தேங்காய்த் தூள் போட்டு சிறிது நேரத்தில் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT