FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

பாட்டி வைத்தியம்...

படர் தாமரை  வந்தவர்கள் சிறிது மிளகை நெய்விட்டு அரைத்துத் தடவினால் படர்தாமரை போய்விடும்.

Updated On : 21 ஜனவரி 2024, 12:00 am IST
பகிர்:

படர் தாமரை  வந்தவர்கள் சிறிது மிளகை நெய்விட்டு அரைத்துத் தடவினால் படர்தாமரை போய்விடும்.

மாத விலக்கின்போது,  சில பெண்களுக்கு  உதிரப் போக்கு அதிகமாகி வயிறு வலிக்கும். இவர்கள் 8 குறுமிளகையும் சம எடை கற்கண்டையும் சேர்த்து நீர்விட்டு காய்ச்சி பாதியாக சுண்டியதும் சாப்பிட வயிற்று வலி தீரும்.

கர்ப்பிணிகள் அதிக அளவில் இளநீர்  குடித்து வந்தால்  மார்பகம் விரிந்து,  பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக அளவு தாய்ப் பால் கொடுக்க வழி வகுக்கும். 

Advertisement

Advertisement

காட்டாமணக்கு இலையை வதக்கிக் கட்ட தாய்ப் பால் சுரக்கும்.

கிச்சிலிக் கிழங்கை வில்லைகளாக நறுக்கி  காயவைத்து இடித்து  தூள் செய்து வைத்துக் கொண்டு  வாய் துர்நாற்றம்  உள்ள நேரங்களில் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

பனிக் காலங்களில் உதடு வெடிப்பு ஏற்படும். இதற்கு கரும்புச் சக்கையை எடுத்து சாம்பலாக்கி  அதனுடன்  வெண்ணெய் கலந்து  உதட்டில் தடவி வர  உதடு வெடிப்பு குணமாகும்.

சுக்கு சிறிது கருப்பட்டி இவைகளை பொடித்து வைத்துக் கொண்டு தினம் இருவேளை வீதம் 3 நாள்கள் சாப்பிட்டு வர உடல் அசதி தீரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments