மகளிர்மணி

மங்களூரு மசாலாக் கறி

மங்களூரு மசாலாக் கறி: சுவையான கத்தரிக்காய் வெங்காயம் குழம்பு

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

கத்தரிக்காய்- 300 கிராம்

வெங்காயம்- 250 கிராம்

மிளகாய் வற்றல்- 4

தனியா, உளுத்தம் பருப்பு- தலா 1 மேசைக்கரண்டி

கடுகு, மஞ்சள், பெருங்காயப் பொடி- 1 தேக்கரண்டி

புளி- 1 உருண்டை

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட வேண்டும். பெருங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு மிளகாய், தனியா, உளுத்தம் பருப்புகளை வதக்க வேண்டும். கனமான பாத்திரத்தில் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும், கத்தரிக்காயைப் போட்டு தேவையான உப்பு போட்டு, மஞ்சள் பொடி போட்டு அரைப் பக்குவத்தில் வேக வைக்க வேண்டும். தேங்காய்த் துருவல், மிளகாய், தனியா, புளி, உப்பு சேர்த்து அரைத்து உளுத்தம் பருப்பைச் சேர்த்து ஒன்றிரண்டாய் அரைத்து கத்தரிக்காயில் போட்டு நன்றாகக் கலக்க வேண்டும். வாணலியில் தேவையான எண்ணெய் வைத்து கடுகைத் தாளித்து வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும். பின்னர், கத்தரிக்காயுடன் சேர்த்து சுருளாக்கி கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து உபயோகிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT