முகப்பு
மகளிர்மணி

பானகம்

புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து, வடிகட்டவும்.

Updated On : 28 ஜூலை, 2024 at 5:36 PM
பானகம்
பகிர்:
Updated On : 28 ஜூலை, 2024 at 5:36 PM

தேவையான பொருள்கள்:

புளி - 150 கிராம் (அ) எலுமிச்சைப்

பழம் - 3

Advertisement

வெல்லம் - 250 கிராம்

சுக்குப்பொடி -  கால் தேக்கரண்டி

ஏலக்காய்த்தூள்  - ஒரு சிட்டிகை

பச்சைக் கற்பூரம் (விரும்பினால்) - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - ஒரு சிட்டிகை

Updated On : 28 ஜூலை, 2024 at 5:36 PM

செய்முறை:

புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து, வடிகட்டவும். அல்லது எலுமிச்சைச் சாறெடுத்து, தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடிக்கவும். அதனுடன் வடிகட்டிய புளித் தண்ணீருடன்/எலுமிச்சைச்சாற்றுடன்  சேர்த்து வெல்லம் நன்கு கரையும் வரை கலக்கவும். பிறகு அதில் சுக்குப்பொடி,  உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். கோயிலுக்குக் கொடுப்பது என்றால் பச்சைக் கற்பூரம் கலந்தால் சிறப்பு.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.