பானகம்
புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து, வடிகட்டவும்.
Updated On : 28 ஜூலை, 2024 at 5:36 PM
தேவையான பொருள்கள்:
புளி - 150 கிராம் (அ) எலுமிச்சைப்
பழம் - 3
Advertisement
வெல்லம் - 250 கிராம்
சுக்குப்பொடி - கால் தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
பச்சைக் கற்பூரம் (விரும்பினால்) - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
Updated On : 28 ஜூலை, 2024 at 5:36 PM
செய்முறை:
புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து, வடிகட்டவும். அல்லது எலுமிச்சைச் சாறெடுத்து, தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடிக்கவும். அதனுடன் வடிகட்டிய புளித் தண்ணீருடன்/எலுமிச்சைச்சாற்றுடன் சேர்த்து வெல்லம் நன்கு கரையும் வரை கலக்கவும். பிறகு அதில் சுக்குப்பொடி, உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். கோயிலுக்குக் கொடுப்பது என்றால் பச்சைக் கற்பூரம் கலந்தால் சிறப்பு.