திடீர் ஊத்தப்பம்
உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக அரியவும்.
கே.நாகலட்சுமி
தேவையான பொருள்கள்:
வெள்ளை ரவை, உருளைக்கிழங்கு- தலா 200 கிராம்
Advertisement
Advertisement
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்- தலா 2
இஞ்சி- 1
கேரட், கொத்துமல்லி அரிந்தது - தலா ஒரு கைப்பிடி அளவு
கறிவேப்பிலை, உப்பு- தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக அரியவும். இதோடு, ரவை சேர்த்து ஒரு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி, மிக்ஸியில் அரைக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்த்து நைசாக தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.
அதில் உப்பும், மற்ற பொருள்களையும் சேர்த்து கலந்து ஒரு சிட்டிகை சமையல் சோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும். தாளிப்புக் கரண்டி அல்லது குட்டி வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஒரு கரண்டி மாவை ஊற்றி, மூடி வைத்து வெந்ததும் திருப்பிப் போட்டு மீண்டும் மூடிவைத்து 2 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். இதை உடனே தயாரிக்கலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.