தேவையான பொருள்கள்:
பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம்- தலா 1 கிலோ
கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி- 100 கிராம்
நல்லெண்ணெய்- 200 கிராம்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மற்ற பொருள்களோடு சேர்த்து மூன்று நாள்கள் வரை ஊறவைத்து, அதில் சிறிதளவு கடுகு, சீரகம், நல்லெண்ணெய் சேர்த்து பெரிய உருண்டைகளாக உருட்டி வெயிலில் காய வைத்து எடுத்துகொள்ள வேண்டும். தேவையானபோது, தேவையான அளவு எடுத்து எண்ணெயில் பொரித்து புளிவிட்டு செய்யும் கூட்டு அல்லது வற்றல் குழம்பு ஆகியவற்றுடன் சேர்த்தால் குழம்பின் சுவை கூடும்.
-ஆர்.ஜெயலட்சுமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.