முகப்பு
மகளிர்மணி

பஞ்சாபி பஞ்சேரி

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மெதுவாக எரியவிட்டு வெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி, ரவையைப் பொன்னிறமாக வறுத்து, அதில் சர்க்கரையையும், பால் பௌடரையும் சேர்த்துக் கலக்கவும்.

Updated On : 3 நவம்பர், 2024 at 3:05 PM
பகிர்:

தேவையான பொருள்கள்:

ரவை, சர்க்கரை - தலா 2 பெரிய கிண்ணம்

வெண்ணெய் அல்லது நெய் - 2 கிண்ணம்

பால் பௌடர் - 2 கிண்ணம்

பாதாம் பருப்பு - 1 கிண்ணம்

உலர்ந்த திராட்சை - 1 கிண்ணம்

ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு.

சுக்குப் பொடி - 1 மேசைக்கரண்டி

ஜாதிக்காய்ப் பொடி - சிறிதளவு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மெதுவாக எரியவிட்டு வெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி, ரவையைப் பொன்னிறமாக வறுத்து, அதில் சர்க்கரையையும், பால் பௌடரையும் சேர்த்துக் கலக்கவும். பாதாம் பருப்பு, காய்ந்த திராட்சையை வறுத்து போட்டு ஏலக்காய்ப் பொடி தூவி, சுக்குப் பொடி போட்டு, ஜாதிக்காய்ப் பொடி செய்து கிளறி கேசரி போல் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.