புல்லட் காபி தெரியுமா?
சூடான காபியில் வெண்ணெயை சேர்த்து கலக்கி, அதில் தேங்காய் எண்ணெயை போதுமான அளவு சேர்த்தால் புல்லட் காபி ரெடி.
சூடான காபியில் வெண்ணெயை சேர்த்து கலக்கி, அதில் தேங்காய் எண்ணெயை போதுமான அளவு சேர்த்தால் புல்லட் காபி ரெடி.
இதனால் கிடைக்கும் நன்மைகள்:
முதலில் காப்பியில் உள்ள காஃபின் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும்.வெண்ணைய், தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்புகள் ஆற்றலை அதிகரித்து உங்களை சுறுசுறுப்பாக வைக்கும். மன தெளிவையும் அதிகரிக்கும்.
Advertisement
தேங்காய் எண்ணெய் மூளைக்கு கீட்டோன்களை எரிபொருளாகத் தருகிறது. அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
எடை இழப்புக்கு உதவும். உடல் செழிப்பை எரிபொருளாக மாற்றி எரிக்கிறது. இதனால் பசி கட்டுப்படுத்தப்படுகிறது.
கொழுப்புகள் கலவை வயது நிரம்பியுள்ள உணர்வை நீண்ட நேரம் பாதுகாக்கிறது. காலை உணவு அல்லது சிற்றுண்டியைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கு இது மிக உதவி. குறிப்பிட்டநேரம் மட்டும் உண்ணாவிரதம் இருக்க விரும்பவர்களுக்கு உதவும்.
உடலின் செயல் திறனை அதிகரிக்கும். உடற்பயிற்சிகள், உடல் செயல்பாடுகளுக்கே தேங்காய் எண்ணெய் உதவி புரிந்து, விரைவான ஆற்றலை தருகிறது. உண்மையில் உடற்பயிற்சிக்கு முன் குடிக்க வேண்டிய பானம் இது.