முகப்பு
மகளிர்மணி

வாழைப்பூ சட்னி

வாழைப்பூவில் நரம்புகளை நீக்கி பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட வேண்டும்.

மகளிர்மணி

வாழைப்பூ சட்னி

வாழைப்பூவில் நரம்புகளை நீக்கி பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட வேண்டும்.

Updated On : 9 ஆகஸ்ட், 2025 at 6:35 PM
பகிர்:

தேவையான பொருள்கள்:

சிறிய வாழைப்பூ- 1

சின்ன வெங்காயம்- 50 கிராம்

பச்சை மிளகாய், மிளகாய் வற்றல்- தலா 4

உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல்- தலா 1 மேசைக்கரண்டி

புளி, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலை- 1 பிடி

செய்முறை:

வாழைப்பூவில் நரம்புகளை நீக்கி பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி எடுக்கவும்.

கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு போட்டு தாளித்து வாழைப்பூவை சேர்த்து வதக்கி, எல்லாவற்றையும் சேர்த்து உப்பு, புளி, கொத்தமல்லி, கறிவேப்பிலையைக் கலந்து அரைத்தெடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →