மகளிர்மணி

சமையல் குறிப்புகள்...

பப்பாளி, நூல்கோல் போன்றவற்றைத் துருவி தாளித்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாயை அரிந்து போட்டு சமைக்கலாம்.

ஆர். ஜெயலட்சுமி

பப்பாளி, நூல்கோல் போன்றவற்றைத் துருவி தாளித்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாயை அரிந்து போட்டு சமைக்கலாம்.

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய் ஆகியவற்றை சிப்ஸ் கட்டரில் சீவிவிட்டு மோரில் உப்பு போட்டு சேர்த்து, நன்றாகப் பிழிந்து காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறுமொறுவென்று இருக்கும்.

கறிவேப்பிலை வாங்கும்போது சிறிய இலைகளைக் கொண்டவைகளை வாங்கினால், மிகுந்த மணல் கொண்டதாகவும் இருக்கும். சீக்கிரமாக அறைபட்டு சுவையும் கூடுதலாகக் கிடைக்கும். நீண்ட இலைகளில் அவ்வளவாக மணல் இருக்காது.

பருப்புப் பாயசம், அரிசிப் பாயசம் போன்றவைத் தயாரிக்கும்போது, பருப்பு, அரிசி நன்றாக வெந்தவுடன் இனிப்பைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பே சேர்த்துவிட்டால் நன்றாக வேகாது. பால் பாயசத்தில் பச்சரிசி நன்றாக வேகும் முன்பே இனிப்பு சேர்த்தால் பாயசம் திரிந்துவிடும்.

இஞ்சியைத் தோல் நீக்கிட, அதை தண்ணீரில் மண் போகும் வரை கழுவி, அம்மிக்கல்லில் இரண்டு கைகளாலும் தேய்த்தாலே போதும். தோல் சுத்தமாக உரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பியன்ஸ் லீக்: அடுத்த சுற்றுக்குத் தேர்வான, வெளியேறிய அணிகளின் விவரங்கள்!

மும்மூர்த்திகள் ஒரே தலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்!

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

SCROLL FOR NEXT