முகப்பு
மகளிர்மணி

கேசரி, பொங்கல், அல்வா செய்யும்போது... டிப்ஸ்!

பால் பாயசம் செய்யும் போது கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்க விட்டுச் செய்தால், பாயசம் மிகவும் சுவையாக இருக்கும்.

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 8:22 AM
பகிர்:

பால் பாயசம் செய்யும் போது கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்க விட்டுச் செய்தால், பாயசம் மிகவும் சுவையாக இருக்கும்.

பஜ்ஜி மாவுடன் ஒரு வெங்காயம், மூன்று பூண்டு பற்கள், சிறிது சோம்பு முதலியவற்றைப் போட்டு அரைத்துக் கலந்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.

இட்லிப் பொடி செய்யும்போது சிறிது கறிவேப்பிலையும் போட்டு மிக்ஸியில் பொடித்தால், பொடி ருசியாக இருக்கும்.

கேசரி, பொங்கல், அல்வா ஆகியவற்றைக் கெட்டியான பிறகு இறக்கக்கூடாது. கொஞ்சம் முன்னதாகவே இறக்கவேண்டும். ஆறிய பின்பு அவை சரியான பதத்துக்கு வந்து விடும்.

இரண்டு வாழைப்பழத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து, அதனுடன் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து ஏதாவது ஒரு பழஎசன்ஸ் ஊற்றிக் காய்ச்சினால் புதிய வகை பாயசம் தயார்.

முழு கட்டுரையைப் படிக்க →