FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

காய்கறி ஊத்தப்பம்

காய்கறி ஊத்தப்பம் செய்வது எப்படி?

Updated On : 1 ஜூன் 2025, 5:01 pm IST
காய்கறி ஊத்தப்பம்
பகிர்:

தேவையான பொருள்கள்:

கொத்தமல்லி, புதினா- அரை கிண்ணம் (பொடியாக நறுக்கியது)

கேரட், முட்டைகோஸ், தலா அரை கிண்ணம் (பொடியாக துருவியது)

Advertisement

Advertisement

வெங்காயம்- அரை கிண்ணம் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி, பச்சை மிளகாய் விழுது- 2 தேக்கரண்டி

உப்பு, மஞ்சள் தூள், எண்ணெய்- தேவையான அளவு

கடலை மாவு- 4 மேசைக்கரண்டி

சோயா பீன்ஸ்- 1 கிண்ணம்

செய்முறை:

சோயா பீன்ஸை நன்றாக ஊறவைத்து அரைத்து புளிக்க வைக்கவும். மறுநாள் காலை அதனுடன் இஞ்சி, மிளகாய் விழுது, உப்பு, கொத்தமல்லி, புதினா, கேரட், முட்டைகோஸ், வெங்காயம் இவைகளை தனியாக அரைத்து கலந்து வைக்கவும்.

தோசைக்கல் சூடானவுடன் தோசை வார்த்து, அதன் மீது கலந்துவைத்துள்ள காய்கறி கலவையைப் பரவலாகத் தூவி லேசாகக் கரண்டியில் அழுத்திவிடவும். எண்ணெய்விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்தால், சத்தான காய்கறி ஊத்தப்பம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments