மகளிர்மணி

பாசிப் பருப்பு அடை

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பாசிப் பருப்பைத் தனியாக ஊற வைக்கவும்.

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி- 400 கிராம்

உப்பு, எண்ணெய், பெருங்காயம், கறிவேப்பிலை- சிறிதளவு

காய்ந்த மிளகாய்- 7

தேங்காய்- 1 மூடி (துருவியது)

கொத்துமல்லி- சிறிய கட்டு

வெந்தயம்- அரை தேக்கரண்டி

பாசிப் பருப்பு- 3 மேசைக்கரண்டி

வெங்காயம்- 1

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பாசிப் பருப்பைத் தனியாக ஊற வைக்கவும்.

அரிசி, வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைத்து, அத்துடன் தேவையான உப்பு, பெருங்காயத் தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும், ஓரளவு மசிந்ததும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து அரைக்கவும்.

பின்னர், அந்த மாவில் நறுக்கிய வெங்காயம், பாசிப்பபருப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, அடை மாவுப் பதத்துக்குப் பிசையவும். தோசைக்கல் சூடானவுடன் அடைகளாகச் சுட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT