முகப்பு
சிறுவர்மணி

பழைய பாடல்: ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே!

ஏட்டில் படித்ததோடு      இருந்துவிடாதே - நீ ஏன் படித்தோம் என்பதையும்      மறந்துவிடாதே! நாட்டின் நெறிதவறி      நடந்துவிடாதே - நம் நல்லவர்கள் தூற்றும்படி      வளர்ந்துவிடாதே! மூத்தோர்சொல் வார்த்தைகளை   

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:30 PM
பகிர்:

ஏட்டில் படித்ததோடு

     இருந்துவிடாதே - நீ

ஏன் படித்தோம் என்பதையும்

     மறந்துவிடாதே!

நாட்டின் நெறிதவறி

     நடந்துவிடாதே - நம்

நல்லவர்கள் தூற்றும்படி

     வளர்ந்துவிடாதே!

மூத்தோர்சொல் வார்த்தைகளை

     மீறக்கூடாது - பண்பு

முறைகளிலும் மொழிதனிலும்

     மாறக்கூடாது!

மாற்றார் கைப்பொருளை நம்பி

    வாழக்கூடாது - தன்

மானமில்லாக் கோழையுடன்

     சேரக்கூடாது!

துன்பத்தை வெல்லும் கல்வி

     கற்றிட வேணும்!

சோம்பலைக் கொல்லும் திறன்

     பெற்றிட வேணும்!

வம்பு செய்யும் குணமிருந்தால்

     விட்டிட வேணும் - அறிவு

வளர்ச்சியிலே வான் முகட்டைத்

    தொட்டிட வேண்டும்!

வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப்

     பெருமைவர

மேதைகள் சொன்னதுபோல்

     விளங்கிட வேண்டும்!

பெற்ற தாயின் புகழும், நீ பிறந்த

     மண்ணின் புகழும்

வற்றாமல் உன்னோடு

    வாழ்ந்திட வேண்டும்!

முழு கட்டுரையைப் படிக்க →